twitter
rss



1. 1975-ம் ஆண்டு தொடங்கிய ரஜினியின் சினிமா பயணத்தில் அவர் நடித்த முதல் படம் அபூர்வ ராகங்கள். வெறும் ஆறே ஆறு காட்சிகளில் மட்டும் நடித்த அவர் பேசிய முதல் வசனம் “பைரவி வீடு இதுதானே…” என்பது தான். அந்தக் காட்சியில் ஒரு வீட்டின் கேட்டை திறந்துகொண்டு வருவதுதான் அவர் தோன்றிய முதல் காட்சி. இன்று, அவரது வீட்டு கேட் திறப்பதற்காக அதிகாலையிலேயே கேட்டுக்கு முன்னால் ஏராளமான ரசிகர்கள்!

2.வில்லனாக நடித்துக் கொண்டிருந்த ரஜினி ஹீரோவாக நடித்த படம் பைரவி. இதில்தான் அவருக்கு ‘சூப்பர் ஸ்டார்’பட்டம் வழங்கப்பட்டது. வழங்கியவர் கலைப்புலி எஸ்.தாணு. சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் முதல் தடவையாக டைட்டில் கார்டில்தான் போடப்பட்ட படம், ‘நான் போட்ட சவால்’.

3. ரஜினி பேசிய முதல் பன்ஞ் டயலாக் “இது எப்படி இருக்கு?”. படம் 16 வயதினிலே.

4.மூன்று முடிச்சு தொடங்கி எந்திரன் வரை பல படங்களில் வில்லனாக நடித்த ரஜினி, கொடூர வில்லனாக நடித்த படம், கமல் ஹூரோவாக நடித்த ‘ஆடுபுலி ஆட்டம்’. வில்லத்தனங்களை செய்து விட்டு “இது ரஜினி ஸ்டைல்” என்பார். அதன்பின், “ரஜினி ஸ்டைல்” என்ற கூற்று, பாப்புலரானது.

5.ரஜினியின் முதல் தோல்விப் படம், ‘வணக்கத்துக்குரிய காதலியே’.ராஜேந்திரகுமார் அதே பெயரில் எழுதிய நாவல் படமாக தயாரிக்கப்பட்டு, தோல்வியடைந்தது. ரஜினி நடித்த முதல் திகில் படம் ஆயிரம் ஜென்மங்கள். பிராமண பாஷை பேசி நடித்த படம் சதுரங்கம், சென்னைத் தமிழ் பேசி நடித்த படம் தப்புத் தாளங்கள்.

6. ஸ்ரீபிரியாதான், இன்றைய தேதிவரை ரஜினியுடன் அதிக படங்களில் ஹீரோயின் ஆக நடித்தவர்.அப்படியிருந்தும், ‘நீயா’ படத்தில் ரஜினியை நடிக்க கேட்டபோது, நான்கைந்து ஹீரோக்களுடன் நடிக்க மாட்டேன் என்று மறுதத்த‌.து.

7.ரஜினி, சிவாஜியுடன் நடித்த முதல் படம் ‘ஜஸ்டிஸ் கோபிநாத்’. அவருடன் நடித்த கடைசிப் படம் ‘படையப்பா’. முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த படம் ‘பில்லா’. மூன்று வேடங்களில் நடித்த படம் ‘மூன்று முகம்’.

8.கோடிக் கணக்கில் சம்பளம் தர முன்வந்தும் ரஜினி இதுவரை ஒரு விளம்பரப் படத்தில்கூட நடித்ததில்லை.“நான் உபயோகிக்காத ஒரு பொருளை மற்றவர்களை உபயோகிக்கச் சொல்வது தவறு” என்பது அவர் கருத்து.

9.நிஜ வாழ்க்கையில் கண்டக்டராக இருந்த ரஜினி எந்தப் படத்திலும் கண்டக்டராக நடிக்கவில்லை.‘ஆறு புஷ்பங்கள்’ படத்தில் விஜயகுமார் கண்டக்டராக நடிக்க, ரஜினி டிரைவராக நடித்திருந்தார். பாட்ஷா படத்தில் ஒரே ஒரு பாட்டில் கண்டக்டராக வருவார்.

10.ரஜினியின் பேவரேட் பாம்பு சீன் முதலில் இடம் பெற்ற படம், பைரவி. அதில் பாம்பை கையில் வைத்துக்கொண்டு பாட்டுகூட பாடுவார். பாம்பு சீன் புகழ் பெற்ற பட்ம், அண்ணாமலை. அதன்பின், ரஜினி படத்தில் என்ன இருக்கிறதோ, இல்லையோ, பாம்பு இருக்கும் என்று சொல்லத் தொடங்கி விட்டார்கள்!

11.தமிழ் படத்தில் மீசை வைத்தால்தான் ஹீரோ என்று எழுதப்படாத விதி இருந்த நாட்களில்,ரஜினி, பாலச்சந்தரின் வற்புறுத்தலுக்காக மீசையில்லாமல் நடித்த முதல் படம் ‘தில்லு முல்லு’.அவர் நடித்த முதல் முழு நீள காமெடி படமும் அதுதான். ரஜினி தயாரித்த முதல் படம் ‘மாவீரன்’ . திரைக்கதை வசனம் எழுதிய படம் ‘வள்ளி’. பாடல் பாடிய படம் ‘மன்னன்’.

12.ரஜினியின் 50-வது படம், தமிழ் படமல்ல. ‘டைகர்’ என்ற தெலுங்கு படம். 100-வது படம் ‘ஸ்ரீராகவேந்திரர்’.ஆரம்பத்தில், ஸ்ரீராகவேந்திரர் படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்க மறுத்தார். பின்னர் ரஜினியின் அன்புக்காக இயக்கினார்.ரஜினியின் அதிக படங்களை இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன்.

13.குறுகிய காலத்தில் நடித்த படம் ‘அன்புள்ள ரஜினிகாந்த்’. 6 நாட்களில் நடித்துக் கொடுத்தார். 9 நாட்களில் நடித்த படம் ‘மாங்குடி மைனர்’.மேனியாக் டிப்ரெசிங் நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமான பிறகு நடித்த ‘தர்மயுத்தம்’ படத்திலும், அந்த நோயால் பாதிக்கப்பட்டவராகவே நடித்தார்.

14.இளைஞன், நடுத்தர வயது குடும்பஸ்தன். தள்ளாடும் முதியவர் என்ற மூன்று கெட்அப்களில் நடித்த படம் ‘ஆறிலிலிருந்து அறுபது வரை’. ரஜினிக்கு தேசிய விருது எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படத்துக்கு தேசிய விருந்து கிடைக்கவில்லை. முள்ளும் மலரும், மூன்று முகம், முத்து, படையப்பா, சந்திரமுகி, சிவாஜி படங்களுக்காக மாநில விருதைப் பெற்றார். மத்திய அரசு வழங்கிய விருதுகள், பத்மஸ்ரீ, பத்மபூஷன்.

15.ரஜினி நடித்த சில படங்களின் பெயர்கள் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டன. ‘நானே ராஜா நீயே மந்திரி’என்ற டைட்டில் ‘தம்பிக்கு எந்த ஊரு’ என்று மாறியது. (‘நானே ராஜா நானே மந்திரி’ என்ற பெயரில் விஜயகாந்த் நடித்த படம் ஒன்று வெளியானது) ‘நான் காந்தி அல்ல’ படத்தின் டைட்டிலில் காந்தியின் பெயர் வருவதால் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து, ‘நான் மகான் அல்ல’ என மாறியது. ‘காலம் மாறிப்போச்சு’ என்ற டைட்டில் ‘தர்மதுரை’ ஆனது.

16.ரஜினியோடு பிரதான கேரக்டரில் பெண்கள் மோதி வெளியான படங்கள், மூன்று முடிச்சு, மாப்பிள்ளை, மன்னன், படையப்பா. அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் எந்திரன். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் அன்புள்ள ரஜினிகாந்த்.

17.முதல் சினிமாஸ்கோப்  படம் பொல்லாதவன். முதல் 70 எம்எம் படம் மாவீரன்.முதல் 3டி படம் சிவாஜி . முதல் அனிமேஷன் படம் கோச்சடையான் (இன்னமும் வெளியாகவில்லை).

18.முதன் முதலாக ஜப்பான் மொழியில் டப் செய்யப்பட்ட இந்திய படம் முத்து. ஜப்பானில்ரசிகர் மன்றம் தொடங்கப்பட்ட முதல் இந்திய நடிகர் ரஜினி. ரஜினி நடித்த ஹாலிவுட் திரைப்படம் பிளட் ஸ்டோன். நேரடியாக நடித்த இந்திப் படங்களின் எண்ணிக்கை 16.

19.தமிழ் சினிமா புள்ளிகளைப் பற்றி அதிகமான புத்தகங்கள் வெளிவந்திருப்பது ரஜினி பற்றித்தான். அவரது வாழ்க்கை பற்றி நிறையபேர் எழுதியிருக்கிறார்கள். ரஜினியை சுயசரிதை எழுதச் சொல்லிக் கேட்டார்கள். அதற்கு அவர் சொன்ன பதில் “சுயசரிதை எழுதும் அளவுக்கு என் வாழ்க்கை பரிசுத்தமானதல்ல. அந்த அளவுக்குபெரிதாக சாதித்தவனும் அல்ல. நான் நடிச்சு மக்களை சந்தோஷப்படுத்துறேன். அவர்கள் பணமாக எனக்கு திருப்பித்தந்து என்னை சந்தோஷப்படுத்துகிறார்கள். அவ்வளவுதான்”. அதுதான் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்.


தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் இயங்கியவை:






01. இராணுவம்< (தரைப் படை -பல்வேறு படை அணிகள்) இம்ரான் பாண்டியன் படையணி, ஜெயந்தன் படையணி, சார்ள்ஸ் அந்தோனி சிறப்புப் படையணி, கிட்டு பீரங்கிப் படையணி, ராதா வான்காப்புப்படையணி, குட்டிஸ்ரீ மோட்டார் படையணி, சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணி, விக்டர் கவச எதிர்ப்புப் படையணி, சோதியா படையணி, மாலதி படையணி, அன்பரசி படையணி, ஈருடப் படையணி, குறிபார்த்து சுடும் படையணி, சிறுத்தைப் படையணி, எல்லைப்படை, துணைப்படை, பொன்னம்மான் மிதிவெடிப் பிரிவு, ஆயுதக் களஞ்சிய சேர்க்கை, பாதுகாத்தல் பிரிவு.

02. கடற்புலிகள்<
நீரடி நீச்சல் பிரிவு, கடல் வேவு அணி, சார்லஸ் சிறப்புக் கடற்புலிகள் அணி, அங்கயற்கண்ணி ஆழ்கடல் நீச்சல் அணி (பெண்கள்), நிரோஜன் ஆழ்கடல் நீச்சல் அணி, கடல் சிறுத்தைகள் சிறப்பு அணி.

03. வான்படை

04. கரும்புலிகள்

05. அரசியற்துறை அரசியல்துறை – பரப்புரைப் பிரிவு.

06. புலனாய்வுத்துறை

07. வேவுப்பிரிவு

08. ஒளிப்பதிவுப் பிரிவு

09. மருத்துவப் பிரிவு லெப். கேர்ணல் திலீபன் சிறப்பு மருத்துவப் பிரிவு

10. கணணிப் பிரிவு

11. மாணவர் அமைப்பு

12. தமிழீழ வைப்பகம்

13. தமிழர் புனர்வாழ்வுக் கழகம்

14. அனைத்துலகச் செயலகம்

15. சுங்கவரித் துறை

16. தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்

17. தமிழீழப் படைத்துறைப் பயிற்சிப் பள்ளி

18. அரசறிவியற் கல்லூரி

19. தமிழீழக் காவற்துறை காவல்துறை – குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறை – குற்ற புலனாய்வுப் பிரிவு

20. வன வளத்துறை

21. தமிழீழ நிதித்துறை

22. விடுதலைப்புலிகள் கலை, பண்பாட்டுக் கழகம்

23. தமிழீழ சட்டக்கல்லூரி, தமிழீழ நீதித்துறை, நீதிமன்றுகள்

24. தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவை

25. காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகள்)

26. செந்தளிர் இல்லம் (5 வயதுக்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகள்)

27. செஞ்சோலைச் சிறார் இல்லம் (ஆதரவற்ற பெண் குழந்தைகள்)

28. வெற்றிமனை (வலுவிழந்தோர்)

29. அன்பு இல்லம் (முதியோர்)

30. பொத்தகசாலை

31. விடுதலைப் புலிகள் செய்தி இதழ்

32. ஈழநாதம் செய்தி இதழ்

33. வெளிச்சம் செய்தி இதழ்

34. ஆவணப்படுத்தல்-பதிப்புத்துறை

35. தமிழீழ தேசியத் தொலைக்காட்சி

36. நிதர்சனம்

37. புலிகளின் குரல் வானொலி

38. மாவீரர் பணிமனை

39. நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த
போராளிகளுக்கான)

40. மயூரி இல்லம் (இடுப்பின்கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது)

41. சேரன் வாணிபம்

42. சேரன் சுவையகம்

43. பாண்டியன் உற்பத்திப் பிரிவு

44. பாண்டியன் வாணிபம்

45. பாண்டியன் சுவையூற்று

46. சோழன் தயாரிப்புகள்

47. வழங்கற் பிரிவு

48. சூழல் நல்லாட்சி ஆணையகம்

49. நிர்வாக சேவை

50. ஆயுத ஆராய்ச்சி மற்றும் உருவாக்கல் பிரிவு

51. மின்னணுவியல் சிறப்பு உதவிப் பிரிவு

52. திரைப்பட வெளியீட்டுப்பிரிவு, மொழியாக்கப்பிரிவு

53. பெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம்

54. தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித் துறை

55. தமிழீழ விளையாட்டுத்துறை

56. தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம்.




பிரஞ்சு நாட்டில் உள்ள ஈபிள் கோபுரம் (Eiffel Tower) 1889 மார்ச் 31ஆம் தேதி திறக்கப்பட்டது. இது அகில உலகக் கண்காட்சி மற்றும் பிரெஞ்சுப்புரட்சி நூற்றாண்டு நிறைவு ஆகியவற்றை நினைவு கூறும் சின்னமாக உருவாக்கப்பட்டது.1887 இல் கட்டத் தொடங்கிய காலத்தில் இதனை 20 வருடம் கழித்து இடிக்கத் திட்டமிட்டனர். ஆனால் அந்தத் திட்டம் பின்னர் கைவிடப்பட்டது. உலக புகழ் பெற்ற ஈபிள் கோபுரம் தொடர்பான மேலும் சில முக்கிய தகவல்..

இக்கோபுரத்தினைக் கட்டியவரின் பெயர் குஸ்ட்டேவ் ஈபிள் (Gustave Eiffel) .இக்கோபுரத்தினை கட்டியவர் பெயராலே இது ஈபிள் கோபுரம் என அழைக்கப்படுகிறது. 


01. கோபுரத்தின் மொத்த உயரம் 984 அடி (324 மீட்டர்) நிலப்பரப்பு 2.5 ஏக்கர் (412 சதுர அடி, 100 சதுர மீட்டர்).

02. கோபுரம் முழுவதும் 18,038 சிறப்பு உருக்கு இரும்புத் துண்டங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த துண்டங்கள் அனைத்தும் 2.5 மில்லியன் போல்ட்கள் (bolts) கொண்டு பொருத்தப்பட்டுள்ளன.

03. இந்தக் கோபுரத்தின் மொத்த எடை 10,100 டன்கள் எனவும் இதில் இரும்பு பாகத்தின் எடை 7,300 டன்களாகவும் உள்ளது.

04.இக்கோபுரத்திற்கு 7 வருங்களுக்கு ஒருமுறை தூரிகை உதவியுடன் வர்ணம் தீட்டப்படுகின்றது. இதுவரை வர்ணம் தீட்ட நவீன முறைகள் எதுவும் பயன்படுத்தப் படவில்லை.

05. வர்ணம் தீட்டுவதற்கு 60 டன் எடை உடையதும் மண் நிறம் கொண்டதுமான வர்ணக்கலவை ஒவ்வொரு முறையும் பயன்படுத்தப்படுகின்றது.

06. இக்கோபுரம் மொத்தமாக மூன்று தட்டுக்களாக அமைந்துள்ளது. இந்த அமைப்பில் உள்ள மொத்த படிக்கட்டுக்கள் எண்ணிக்கை 1,665 ஆகவும் இதற்குத் துணையாக 8 மின்தூக்கி (Elevator) வசதியும் உள்ளது .

07.இக்கோபுரம் ஒவ்வொரு தட்டுக்களிலும் உணவகம், கண்காட்சி மண்டபம், ஓய்வெடுக்கும் பகுதி, சுற்றுலா வெளி, தகவல் நிலயம் என்பவற்றைக் கொண்டுள்ளது.

08.இந்தக் கோபுரத்தின் உச்சி பகுதி 1909 ஆம் ஆண்டிலிருந்து வானொலி ஒலிபரப்பு தேவைக்கும் 1957-லிருந்து தொலைக்காட்சி ஒளிபரப்பு தேவைக்கும் பயன்படுத்தப்படுகின்றது.இத்துடன் கோபுரத்தின் கீழ்பகுதியில் சுரங்க வானொலி நிலையமும் இயங்குகின்றது.

09. இக்கோபுரம் 42 மைல் தூரத்தில் இருந்து தெளிவான காலநிலையில் கண்களுக்குத் தெரிகின்றது. பிரஞ்சு நாட்டின் 72 விஞ்ஞனிகள் பெயர்கள் கோபுரத்தின் அடிப்பாகத்தின் நான்கு முகப்புக்களில் ஒவ்வொன்றிலும் 18 பெயர் விகிதம் பொறிக்கப்பட்டுள்ளது. இதனை 121 வேலையாட்கள் 2 வருடம் 2 மாதம் கொண்ட காலத்தில் கட்டி முடித்தார்கள்.

10. கோடை வெய்யில் கோபுரத்தின் பக்கவாட்டில் படும் வேளையில் மொத்தக் கோபுரமானது அதிகபட்சம் 18 சென்டி மீட்டர் முன்நோக்கி வளைவதாக கணிப்பிடப்பட்டுள்ளது.

11. அசாதாரணக் காற்றின் சீற்றத்தில் சிக்கும் நேரங்களில் இதன் உச்சிப் பகுதி 15 சென்டி மீட்டர் பக்கம் பக்கமாக ஊசலாடுவது கண்டறியப்பட்டுள்ளது.

12. இக் கோபுரம் கட்டி முடிக்கப்பட்ட காலத்தில் இருந்து 1930 ஆம் வருடம் வரை சுமார் 40 வருடங்கள் உலகின் மிகவும் உயரமான கோபுரம் என்கிற புகழைப் பெற்றிருந்தது.

13. இக்கோபுரம இதுவரை 243 மில்லியனுக்கும் அதிகமானவர்களால் பார்வையிடப் பட்டுள்ளது.

14.ஈபிள் கோபுரம் 42 மைல் தூரத்தில் இருந்து தெளிவான காலநிலையில் கண்களுக்கு புலப்படுகின்றது.