twitter
rss

                                                      கவிஞர் வாலி



01. எம்.ஜி.ஆருக்கு 63 படங்களிலும், சிவாஜிக்கு 76 படங்களிலும், கமல் - ரஜினி, விஜய் - அஜித், தனுஷ் - சிம்பு, என்று பல தலைமுறைக்குப் பாட்டெழுதிய ஒரே கவிஞர் வாலி மட்டும்தான்.

 02. 1958இல் "அழகர்மலை கள்ளன்' என்ற படத்தில் பாடல் முதன் முதலாகப் பாடல் எழுதத் தொடங்கினார் வாலி.தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்று விளங்கிய ‘டி. எம். சௌந்தரராஜன்’ அவர்களால், சினிமாவிற்கு பாட்டெழுத சென்னைக்கு அழைத்துவரப்பட்டார்.  

 03. கவிஞர் வாலி எட்டாம் வகுப்பு படிக்கும்போதிலிருந்தே பார்த்தவரை அப்படியே வரையும் ஆற்றல் பெற்று விளங்கினார். அதனால் அப்போது ஆனந்த விகடனில் பிரபல ஓவியராக இருந்த மாலி மீது இவருக்கு மாளாக் காதல் இருந்தது. இதை உணர்ந்த வாலியின் பள்ளிக்காலத் தோழர் பாபு என்பவர் "நீ மாலியைப் போல வரவேண்டும்' ரங்கராஜனை வாலி ஆக்கினார்.

 04. வயதான பிறகு பீல்டில் இருக்கமாட்டார்கள். அப்படி பீல்டில் இருந்தாலும் பெரிதாக எடுபடாது. வேண்டா வெறுப்பாகத்தான் அதை ரசிகர் பார்ப்பார்கள்; கேட்பார்கள். ஆனால் அப்படி எந்த மாற்றமும் இன்றி 82வயது வரை ரசிக்கும்படியான பாடல்கள் தந்த ஒரு பாடலாசிரியர் வாலி.

 05. கவிஞரை "என்ன ஆண்டவனே' என்று எம்.ஜி.ஆரும்,
 "என்ன வாத்தியாரே' என்று சிவாஜிகணேசனும்
 அன்புடன் அழைப்பார்கள்.

 06. ஸ்ரீரங்கத்தில் வாலி நடத்திய "நேதாஜி' என்ற கையெழுத்துப் பத்திரிகையில் பல இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். அப்படிப் பங்கேற்றுக் கொண்டவர்களில் ஒருவர் பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆனார். அவர்தான் எழுத்தாளர் சுஜாதா.கையெழுத்து பத்திரிக்கையின் முதல் பிரதியை வெளியிட்டவர் புகழ்பெற்ற எழுத்தாளர் ‘கல்கி’ ஆவார். 

 07. 15000 பாடல் என்பது அவர் எழுதிய பாடல்களின் எண்ணிக்கை. இதுவரை இந்த இலக்கை எந்தப் பாடலாசிரியரும் தொட்டதில்லை. இனி தொடப்போவதுமில்லை!.

 08. கவிஞர் வாலி, சினிமா வாய்ப்பு தேடி அலைந்த காலகட்டத்தில், தொடர்ந்து ஏற்பட்ட தோல்விகளால் ஊருக்குத் திரும்ப முயன்றார். அந்த நேரத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய "மயக்கமா... கலக்கமா...' என்ற பாடலைக் கேட்டுத்தான், நம்பிக்கையோடு வீடு திரும்பினார். அந்த நம்பிக்கை, தமிழ்த் திரையுலகிற்கு மிகப்பெரிய பாடலாசிரியரைத் தந்துவிட்டது.

 09. "உதயசூரியனின் பார்வையிலே, உலகம் விழித்துக்கொண்ட வேளையிலே...' என்று பகிரங்கமாக திமுக சின்னத்தையே, எம்.ஜி.ஆர் மூலமாக மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் கவிஞர் வாலி.

 10. திரைப்படப் பாடலாசியர் கவிஞர் கண்ணதாசன் அமர்ந்து கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில் அவருக்கு இணையாக சிம்மாசனமிட்டு அமர்ந்து காலத்தால் அழிக்க முடியாத அற்புதமான பாடல்களைத் தந்தவர் வாலி.

 11. எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, சங்கர் கணேஷ், ஏ.ஆர்.ரஹ்மான், ஹரீஷ் ஜெயராஜ், வித்யாசாகர், தேவா முதற்கொண்டு, இன்றைய ஜீ.வி.பிரகாஷ் குமார், அனிருத் வரை அநேகமாக தமிழ்த் திரையுலகின் அத்தனை இசையமைப்பாளர்களின் இசையமைப்புக்கும் பாடல் புனைந்த கவிஞர் வாலி.

 12. 1966ஆம் வருடம் முதன் முதலாக கருணாநிதியை "மணி மகுடம்' படப்பிடிப்பில் சந்தித்தார் வாலி. அன்று தொடங்கி தனது இறுதிக் காலம் வரை துளி பிசிறில்லாம் இருவரும் நண்பர்களாகவே இருந்தார்கள்.

 13. கவிஞர் வாலி மிகப்பெரிய பாடலாசிரியராக இருந்தாலும், பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தாலும், கவியரங்க மேடைகளில் முதன்மை இடம் வகித்திருந்தாலும் இதுவரை அவர் வெளிநாடு சென்றதில்லை. அதனால் அவரை எல்லோரும் "பாஸ்போர்ட் இல்லாத கவிஞர்' என்று சொல்வார்கள்.

 14. "அம்மா என்றழைக்காத உயிரில்லையே...' பாடலின் வரிகளில் உள்ள தாய்மையின் மேன்மையை உணர்ந்து அந்தப் பாடலை, திருச்சியிலுள்ள ஒரு கோவிலில் கல்வெட்டாகச் செதுக்கி வைத்துள்ளார்கள்.

 15. எம்.ஜி.ஆருக்கு அரசியல் ரீதியாக பலமாக உதவியவை கவிஞரின் பாடல்கள். அந்தத் திரை நாயகனை அரசியல் சிம்மாசனத்துக்குக் கொண்டு போன பெருமைக்கு வாலிக்கு உண்டு.

 16. "உங்கள் பாடல்கள் தி.மு.கவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியிருக்கிறது' என்று அப்போதைய முதலமைச்சர் அண்ணாதுரையே 1967 வெற்றிக்குப் பிறகு, வாலியிடம் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

 17. காதல், நகைச்சுவை, தத்துவம், கலகலப்பு, காதல் தோல்வி, பக்தி எனப் பல்வேறு நிலைப்பாடுகளில் 15000 பாடல்களுக்கு மேல் எழுதி சாதனை படைத்தவர் வாலி. கிட்டதட்ட 60 ஆண்டுகாலம் அவர் எழுதிய பாடல்கள் திரைத்துரையை அலங்கரித்துள்ளன.

0 comments: