twitter
rss






ஒரு இளைஞன் 21 வயதில் வியாபாரத்தை தொடங்கினான்.தோற்றுப்போனான்.மாகாண சட்டசபைக்கு போட்டியிட்டான்.மண்ணைக் கவ்வினான்.தொழிலிலும் தோல்வி. காதலியும் மறைந்தாள்.அவன் அசரவேயில்லை.நரம்புத்தளர்ச்சி அவனை வாட்டி எடுத்தது.போராடி மீண்டும் தேர்தலில் குதித்தான்.தோல்விதான் அவனைத் தழுவியது.முதலில் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி.பின்னர் மக்கள் மன்றத் தேர்தலிலும் தோல்வி.47_வது வயதில் ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட்டுத் தோல்வி மேல் தோல்வி.ஆனால் 52_வது வயதில்ஜனாதிபதித் தேர்தலில் குதித்தான்.வெற்றி அவனை முத்தமிட்டது.அதன் பிறகு அவன் புகழ் உலகெங்கும் பரவியது.அவன் தொட்டது துலங்கியது.அவனது பெயரை உலகில் உள்ள எல்லா நாடுகளின் வரலாற்று ஆசிரியர்களும் உச்சரித்தனர்.உலக வரலாற்றிலேயே அவருக்கென்று ஓர் அத்தியாயம் ஒதுக்கப்பட்டது.அவர் பெயர்தான் ஆபிரகாம்லிங்கன்.

0 comments: