ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர் மார்க் ஸுக்கர்பெர்க் (Mark Zuckerberg)என்பவரால் யதேச்சையாக உருவாக்கப்பட்டதுதா...
நம்பிக்கை என்பது
நம்பிக்கை என்பது, தொடக்கத்தில் ஒரு சின்னச் செடி. அதை ஆரம்பத்தில் யார் வேண்டுமானாலும் வெட்டி விடலாம். அதுவே ஆழமாக வளர்ந்துவிட்டால்... அகலமாகப் படர்ந்துவிட்டால்.... நம்பிக்கை விருட்சத்தை எவராலும் வெட்டா முடியாது.
நம்மைப் பற்றிய நமது நம்பிக்கைகள் ஆரம்பத்தில் சின்ன்னச் செடிதான். நம்மை கேலிபேசிகிற கூட்டம்.ஓர் ஆட்டு மந்தைதான்,கொஞ்சம் அசந்துவிட்டால்,அந்த ஆட்டுமந்தை நமது நம்பிக்கைச் செடியை மேய்ந்து நாசமாக்கிவிடும்.
நமது நம்பிக்கைகள் வளர்ந்து,கம்பீரமான விருட்சமாக நின்றால்,இந்த ஆட்டு மந்தை இதன் நிழலில் ஒதுங்கவரும்.குனிந்து பார்த்துக் கேலிபேசிய மூடர்கள், நிமிர்ந்து பார்த்துத் "தலைவரே...." என்பார்கள்.
------------------------
December 2, 2010 at 9:37 AM
ரசனைக்குரிய வகையில் அருமையாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
http://mathisutha.blogspot.com/